19 Sept 2009

விழி மூடி நான் துாங்கி...!

விழி மூடி நான் துாங்கி
பல இரவு தாண்டிருச்சு..

வீதி வழி உமை பிரிந்த
நினைவுகளை எண்ணிய படி


தாய் பிரிந்தோம்
தந்தை பிரிந்தோம்
துாக்கி வளர்த்த உறவு பிரிந்தோம்
கூட வந்த தோழர் பிரிந்து
பிரிந்து பிரிந்து இறுதியில்
எம்மை நாமே பிரிந்தது முதல்

விழி மூடி நான் துாங்கி
பல இரவு தாண்டிருச்சு..



காற்று வாங்கினோம்
காதல் வாங்கினோம்
கை கோர்த்து நாம் நடந்த வீதியில்
கற்பனைகள் சிற கடிக்கும்
கனவுலகின் இடை நடுவில் - நாம்
காணாமல் போனது முதல்

விழி மூடி நான் துாங்கி
பல இரவு தாண்டிருச்சு..



ஒன்றாக படுத்து உறங்கி
ஒரு தட்டில் உணவு அருந்தி
ஒரு வழியே பல இரவு
ஒன்றாக நாம் நடந்து
பயணத்தின் இடை நடுவில்
பாதை மாறி தொலைந்தது முதல்

விழி மூடி நான் துாங்கி
பல இரவு தாண்டிருச்சு..



உம் நினைவில் நான் நடந்து
ஊர் எல்லை தாண்டியாச்சு
எல்லைகள் தாண்டிய பின்
ஏமாற்றம் பல எனக்கு
எது நடப்பினும் ஏற்பதென்று
எனக்குள் உறுதி கொண்டு

விழி மூடி நான் துாங்கி
பல இரவு தாண்டிருச்சு..



பயணத்தின் இடை நடுவில்
தொலைந்போன எம் உறவு
மீண்டும் துளிர்க்கும் என்று
மனதுக்குள் எண்ணிக்கொண்டு
உம் நினைவில் நான் நடப்பேன் இறுதி
வரை கூட வாரும் தோழர்களே..

No comments: