8 Oct 2009

நினைவலைகள்..

கண் இருந்தும் குறுடனாய்
வாய் இருந்தும் ஊமையாய்
மௌனித்த வாழ்வினில்
மீண்டும் மீண்டும்
உயிர் பெரும்
உயிர் உள்ள ஜீவன்கள்

இதயத்தால் உயிரூட்டி
எண்ணத்தால் உணர்வூட்டி
நடமாட வைத்த ஓடங்கள்

கரை உடைத்து
இதய கதவுடைத்து
நீர் நிறைத்து வடியும்
நினைவலைகள்

ஊர் மறைத்து
பெயர் மறைத்து
உணர்வை மட்டும்
ஒப்பித்தால்
நிம்மதி கொள்ளுமா
நினைவலைகள்..??!!


தேன் நிறைத்த கிண்ணத்தில்
கண் மயங்கும் உலகத்தில்
நான் பருகும் திரவத்தில்
உன் உதிரம் கண்டு
கண் கலங்கி அழுவது
தான் நிஜம்.,

வாழ்வ (அ ) ழித்த சொந்தங்கள்
மனம் நிறைத்த செல்வங்கள்
நிலம் புதைந்த வித்துக்கள்
கண் அயர்நது துாங்குங்கள்

நிஜம் உரைத்து
நிறம் தெறித்து
விடைபகரும்
வேளை வரும்
அதுவரை..

கண் அயர்ந்து துாங்குங்கள்

No comments: