13 Nov 2009

காதல்


என் கையில் என் முகம் தெரிந்தது
எதற்கும் ஒரு புன்னகை வந்தது
எங்கும் ஒரு வாசனை இருந்தது
எதற்கும் ஒரு காரணம் தெரிந்தது
அங்கே ஒரு அமைதி இருந்தது
அருகே செல்ல அதிசயம் இருந்து
அங்கே எனக்கொரு இதயம் இருந்தது
அசைத்து பார்க்க ஆசை இருந்தது

தொட்டு பார்த்தேன் சிலிர்த்து கொண்டது
தொடர்ந்து பார்த்தேன் சொர்க்கம் தெரிந்தது
எண்ணி பார்த்தேன் வியப்பாய் இருந்தது
எனக்கு கொஞ்சம் இதமாய் இருந்தது

வேண்டும் என்று இதயம் சொன்னது
வேண்டாம் என்று அறிவு சொன்னது
வேடம் போட்டு அறிவை மறைத்தேன்
விருப்பத்தோடு இதயம் திறந்தேன்
கண்ணை மூடி இருட்டில் நடந்தேன்
கவிதை வடித்து கதவை திறந்தேன்
காத்திருந்து கையை பிடித்தேன்
காதல் என்று சொல்லி சிரித்தேன்

சேர்ந்தே இருவரும் சிறகை விரித்தோம்
சொர்க்கம் தேடி சேர்ந்து பறந்தோம்
சேரும் இடம் வந்த போதும்
சேரா திருந்து காதல் செய்தோம்

காதல் என்றால் இது தான் என்று
காத்திருந்து அறிந்து கொண்டோம்
கடவுள் என்ற ஒன்றை கூட
தள்ளி வைத்து காதல் செய்தோம்

வரமாய் வந்த உறவு அது
வரம் தந்து இதம் தந்தது
வாழ்க்கை முழுதும் அருகே இருத்த
வாயை திறக்க வார்த்தை தடுத்தது

நேரம் வந்ததும் பிரிவு வந்தது
நேரத்தோடு அழுகை வந்தது
எதை சொல்லியும் இதயம் மறுத்தது
ஏற்க சொல்லி அறிவு சொன்னது

வேசம் போட்டு இதயம் மறைத்தேன்
பிரிவை கூட சுகமாய் ஏற்றேன்
அவளை சுமப்பதாய் என்னை சுமந்தேன்
எனக்கு நானே சுமையாய் இருந்தேன்

திரும்பி பார்த்தேன் இருட்டாய் இருந்தது
தொலைவில் பார்த்தேன் தோல்வி சிரித்தது
எண்ணி பார்த்தேன் நடந்து முடிந்ததை
எழுதிப் பார்த்தேன் நடக்க போவதை

எல்லாம் ஒரே வியப்பாய் இருந்தது
என்ன செய்ய தவிப்பாய் இருந்தது
மீண்டும் ஒரு முறை கையை பார்த்தேன்
என் கையில் என்முகம் தெரிந்தது
மீண்டும் ஒரு வாசனை தெரிந்தது
எதற்கும் ஒரு காரணம் தெரிந்தது
சிரித்து கொண்டு எழுந்து நடந்தேன்
“ காதல் என்பதை ” புரிந்து கொண்டேன்
“ காதல் ...........”

No comments: