21 Nov 2009

மாவீரர்


நினைவில் இருத்தி நினைவு கொள்ளும்
இறந்து போன நிஜங்கள் அல்ல
கனவில் வந்து காட்சி தந்து
காரியம் செய்யும் கற்பனை அல்ல
உயிரை கொடுத்து உரிமை காத்த
உத்தமர் நீங்கள் எம்
புத்திரர் நீங்கள்


விட்டு வந்தோம் விதைத்து வந்தோம்
கண்ணீர் மழைக்குள் கரைத்து வந்தோம்
தொட்டு பார்த்த சுகங்கள் அனைத்தையும்
தொலைவில் அங்கே புதைத்து வந்தோம்
விட்டு வந்து நினைவு இங்கே
குத்தும் முள்ளாய் குடைந்திருக்க
அச்சம் நீக்கி அரியனை ஏற்ற
அழைப்பு வைப்போம் எழுந்து வாரீர்


கருவாய் இருத்தி மூச்சாய் சுமந்தீர்
காவல் வீரராய் காட்சி தந்தீர்
எம்மை காக்க உம்மை கொடுத்தீர்
எதிர்த்து வந்த பகைவன் மீதே
எரிமலையாய் வெடித்து மறைந்தீர்


உம்மை எண்ணி குழுங்கி அழ
எங்கள் நெஞ்சில் ஈரம் இல்லை
குனிந்த தலைகளை நிமிர்த்தி இன்று
உறுதி செய்வோம் எழுந்த வாரீர்
எடுத்து வைத்த அடி இருக்க
எழுந்து நடக்க உணர்வு தாரீர்

No comments: