7 May 2010

அர்த்தங்கள் கேட்கிறேன்...!!

இல்லாத ஒன்றை எண்ணி
இருட்டுக்குள் முனுமுனுக்கிறது
காற்றுக்கும் கடதாசிக்கும்
ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாய்
உள்ளுக்குள் முனு முனுக்கிறது
வீச மறுத்த காற்றுக்கும்
பூக்க மறுத்த மொட்டுக்கும்
இன்னமும் ஏதோ ஒன்று
இருக்கதான் செய்கிறது.
காரணம் இன்றி இங்கே
காரியங்கள் இல்லை என்றால்
மழை நின்ற பின்னும்
எனக்குள் துாவும் துாறலுக்கு
என்ன அர்த்தம்...!!!!

உயிரிருந்தும் இல்லாத உருவத்தில்
உலகத்தில் எத்தனை உயிர்கள் !!
நானும் அவர்களை போல் ,
நடமாடிக் கொண்டிருப்பதால்
மனிதன்..,
இல்லையேல்
பேச மறுத்து விட்டால்
பிணமாகப் போய் விடுவேன்,
கிறுக்கலுக்கே காரணம் கேட்கும்
உலகம் இது
மௌனத்திற்கு மரணம்
முற்றுப்புள்ளியா..!!

விடைகள் சொல்லும் விருப்பத்தில்
நீ இல்லை,
வேண்டாம் எனக்கு விடைகள்,
கேள்விக்கே காரணம் இல்லை
என்னிடம் .
புன்னகைக்க மட்டுமே முடிகிறது ,
புரியாத குழப்பத்தை எண்ணி
புதிர் கேள்வி தானே
கேட்க முடியும் .
மாற்றங்களை ஏற்க
மனதிற்கு துணிவில்லை
மாறாதே என்று கேட்க
வாரத்தைக்கு உரமில்லை.
இருந்தும் உன்னிடம் தானே
அர்த்தங்களை தேட முடியும்..?

No comments: