8 Jul 2010

கருவறைக் கதைகள்

கருவறைக் கதவு தட்டி
கண் விழித்த என் குழந்தை
சாட்சிகளாய் மாறும் முன்னர்
காட்சிகளாய் கலைந்து போனது


பெறாமல் பெற்ற குழந்தை
பேர் சொல்ல வளர்த்து வந்தேன்
பேச வாய் திறக்கும் முன்னர்
மூச்சடங்கி போனது


புலியின் குகைக்குள்ளே
புள்ளி மானாய் வளர்த்து வந்தேன்
புது உலகை படைக்க வேண்டி
பல கலைகள் கற்று வைத்தேன்


புன்னகைத்து அவள் அனுப்பும்
புகைப்பட காட்சிகளுக்குள்
சொர்க்கத்தை காண்பிப்பாள்
சொந்தங்களை காண்பிப்பாள்


வாழும் ஆசையுடன்
கோலமிட்டேன்
கோலங்கள் காயும் முன்னர்
கோலங்கள் கலைந்ததங்கே


நெருப்பெடுத்து வந்த பகை
நிஜங்களை சுட்டு போட
நான் அறிந்த பல கதைகள்
நினைவுகளாய் மாறியதின்று


கறுத்து தடித்த
போர் மேக கூட்டங்களுள்
கருகிப் புதைந்ததென்
கருவறை கதைகள்


No comments: