11 Dec 2011
சுயம்
உதிர்ந்து போன
ஒற்றைச் சிறகு
ஓவியத்தின் துாரிகையாய்
முடிந்து போன கனவுகளுக்கு
மீண்டும்
திறப்பு விழா
வெற்றுத்தாள் – நாளை
ஏலத்தில் விலை பேசப்படலாம்!
இயங்கு நிலை சக்தி
உறங்கு நதியாக
ஓடையில் வீழ்ந்த சருகு
சலனமின்றி மீட்டிச் சொன்னது
'' உனக்கும் உயிர் உண்டு ''
விழித்துக் கொண்டன
கரைகள்….
குளிர்காலத்து மரங்களின் அடியில்
உதிர்ந்து கிடக்கின்றது
நினைவுகள்…..
மொட்டை மனங்கள் - மீண்டும்
நத்தார் விளக்குளின் ஒளிர்வில்
புன்னகைத்த மரங்கள்
அசைவின்றி கிடற்க………
அங்கே நிலவு
சுட்டிய விரல்கள்
எழுதாத நம்பிக்கையை
எச்சில் செய்தது
குழந்தை..,,
இருண்ட வானத்தை
அழகாக்கியது
நம்பிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment