2 Dec 2011
அத்தியாயம்......
வானவில்லின் வர்ணங்களாய்
நம் வாழ்க்கை
நீரோடு நீலமாய்
நினைவுகள் கலந்திருக்க
இருந்ததும் தொலைந்ததும்
இதயத்தின் ஓரத்தில்
ஒதுங்கிக் கொள்ளும்
சுடும் நெருப்பும் சுட்டு விரலுமாய்
தொட்டு விடும் நினைப்பில்
தொக்கி நிக்குது தவிப்பு
இமைகளின் துடிப்புடன்
இதயங்கள் போட்டி போட்டன
நக இடுக்குகளின் இடைவெளியில்
ஒரு நாடகமே அரங்கேறியது
உனக்கும் எனக்கும் எப்போதும்
இடைவெளிகள் அதிகம்
இப்போது அது
ஒளியாண்டை தாண்டி நிக்குது
ஏனோ
இதயத்தின் ஓசை
ஒலியின் வேகத்தை
தாண்டிட துடிக்குது
உணர்ச்சிகளின் வேகத்தில்
உலகமே கட்டுண்டு கொள்ள
சப்பித் துப்பிய நகத்துண்டு
காலடியில் கிடந்து உன்
கவிதைகளைச் சொன்னது
பாதங்களின் துாண்டுதலினால்
பாசங்கள் கட்டுண்டு கிடப்பதில்லை
இதயத்தின் துடிப்பினில்
உறவுகள் சிக்கித் தவிப்பதில்லை
உன் நினைவுகளால்
என் வாழ்க்கை
சிதறுண்டு கிடப்பதில்லை
இதை அறிக !!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment