இருண்ட மேகத்தின் கரியதிரைச் சீலைக்குள்
புதைந்து கிடக்கிறது கண்ணீர்...
கிழக்கே சூரியனின் உதயம் பார்த்து
காலமும் ஏங்கிக் தவிக்குது....
காயங்களைச் சுமந்து வலுவிழந்த மேய்ச்சல் நிலம்
விதைத்தலை எதிர் பார்க்கிறது....
சுவடுகள் அழிந்தாலும் அவர்கள்
மண்ணோடு தான் கலக்கிறார்..
எங்கள் மனதோடு வாழ்கிறார்.
No comments:
Post a Comment