செந்நீரும் கண்ணீருமாய் கொடுத்து
மண்மீது நாம் ஓர்
பெருமழைக்காய் காத்திருந்தோம்..
வேள்வித்தீயில் கருக்கொண்ட விண்மேகம்
இடைநடுவில் புகுந்த பெருங்காற்றாள்
தன் கற்பம் கலைந்தது - அந்த
‘‘மண்ணில் வீழா மழைத்துளிக்காய்”
இன்றும் விண்ணைப் பார்த்தபடி
காத்திருக்கிறோம் நாங்கள் .
1 comment:
கவிதை மனம் நனைத்துப்போனது
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment