அவர்கள் அந்த மண்ணில் வீழும் வரை
அது அவர்களுடையதாகவே இருந்தது
அவர்கள் மரணங்களின் பின்னால் - அது
அவன் பாதங்களின் கீழ் - அவர்கள்
உடலை தாங்கும் புதை குழிகளானது..
கைகளில் அகப்படாத கடிதங்களாய் பல கதைகள்
அங்கே புதையுண்டு போயிருக்கும்
நாளைய தேடலில் உடலின் எச்சங்கள்
உக்கியே மறைந்தாலும்
உணர்வுள்ள கடிதங்கள் நிச்சயம்
அவர்கள் வரலாறு சொல்லும்....
No comments:
Post a Comment