10 Mar 2013

நினைவுகளுடன்..



இது கதையல்ல !
நிஜம்,
கனவல்ல !
ஓர் காவியம்.
நீருக்கும் நிலவுக்கும் மட்டுமே தெரிந்த
இரகசியம் .

இன்று
சாட்சிக்கு யாருமில்லை.
கண்களை மூடிக் கொண்டு
கணம் எண்ணிப் பார்க்கின்றேன்
உள்ளம் கை சிவந்து - மறுகணம்
மெல்ல வெளுத்தது இன்றும்.
நிமிடங்களுக்குள்
மீண்டும் ஒர் மரணம்
என்னை கடந்து சென்றது
அடுத்து ஒரு பிறப்பெடுத்து
மீண்டும்
நடமாடும் பிணமானேன் இன்று.

No comments: