28 Apr 2013

துரோகம்


நான் ..,
கைது செய்யப்படாத வரை - என்
விரலின் நகக் கண்கள் வழி

ஆணிகள் செருகப்படாத வரை - அந்த
நகங்கள் ஒவ்வொன்றாய்
எண்ணிக்கையோடு பிடுங்கி எடுக்கப்படாத வரை ,
அங்கே எனது ...
ஆண்குறியூடு மின்சாரம் செலுத்தப்படாத வரை ,
முதுகுத் தண்டின் முள்ளம் எலும்புகளால்
சுள் என்று ஓர் வலி எந்தன்
உச்சி நரம்பு மண்டலத்தைத்
துளைக்காத வரை ...,
சில ‘‘துரோக அரசியலின்”
சொல்லனா வலிகள்
எ(உ)னக்கும் புரிவதில்லை.

No comments: