31 Jan 2014

வறட்சி


வற்றிப் போன நதிக்கரையின் ஓரங்கள்
இலேசாக தழும்பத் தொடங்கின
துளிர் விட்டெழும்பவே
தத்தி தடவி மண்ணின் துளைதேடி 
நகர்ந்தது விழுதுகள்
எங்கெங்கோ அலைந்து திரிந்த
நீர்ப்பறவைகள் 
இடம் மாறி 
அந்த குளத்தின் ஓரத்தில்
குந்த ஒரு இடம் தேடி 
ஒதுங்கிக் கொண்டன
இயற்கையில் 
மாற்றங்கள் தோன்றுமென நம்பி
ஏமாந்த உள்ளம் தனக்குள் 
சமாதான கீதம் பாடிக் கொண்டது
காணல் நீரின் தோற்றத்தில்
ஏமாந்தெழுந்த அதன் விழிகள்
மீண்டும் தொடரப் போகும்
வரட்சிக்கு
தன்னை தயார்படுத்திக் கொண்டது.

No comments: