கண்ணீர் சிந்தி கரைந்து போகாதீர்
நெஞ்சு வெடித்து சிதைந்து போகாதீர்
தலைகுனிந்து தாழ்ந்து போகாதீர்
நாம் என்ன மரணித்தா போனோம்
நெஞ்சு வெடித்து சிதைந்து போகாதீர்
தலைகுனிந்து தாழ்ந்து போகாதீர்
நாம் என்ன மரணித்தா போனோம்
வரிகளில வடித்து வாழ வைக்காதீர்
சிதைகளில் இட்டு சீரழிக்காதீர்
கரங்களில் ஏந்தி காயம் ஏற்காதீர்
நாம் என்ன மரணித்தா போனோம்
தீபங்கள் ஏற்றி வருந்தாரீர்
பூக்களை துாவி கலங்காதீர்
கைகளை கூப்பி வணங்காதீர்
நாம் என்ன மரணித்தா போனோம்
உறுதி மிக்க தலைவன் பின்
உணர்வு மிக நடந்த போதும்
உங்கள் கரம் பற்றி
உணவருந்தி சென்றபோதும்
எதை சொல்லி சொன்றோம் நாம்
நாம் என்ன மரணித்தா போனோம்
கருமேகம் எமை சூழ்ந்து வந்த போதும்
பகை வந்து எம் நிலம் ஆண்டபோதும்
உணர்வோடு உங்கள் கரம் பற்றி
உறுதியோடு எதை சொல்லி சொன்றோம்
நாம் என்ன மரணித்தா போனோம்
மரணிக்க வேண்டாம் என்றே
மரணத்துக்கு மரணம் கொடுத்தோம்
மரணத்தை கடந்து வந்து உம்
மனங்களில் குடி இருந்தோம்
பின்னும் ஏன்
மரணத்தை என்னி நீங்கள்
மரணிக்க வேண்டும் இங்கே
உங்கள் கரம் நிறைய
நாம் தந்த சுமை இருக்க
கண்ணீர் துடைக்க எப்படி முடியும்
பூத்துாவி வருந்தவா முடியும்
கைகூப்பி தொழவா முடியும்
எதற்காக கண்ணீர் இங்கே
செந்நீர் சிந்தும் என் தேசம் கண்டு
கண்ணீர் சிந்தும் நேரமல்ல
வெண்ணீர் கொண்டு வீரம் பேச
இது விவேகமான நேரம் அல்ல
குணிந்திருந்த தலை போதும் இனி
கூப்பி இருந்த கரம் போதும்
கட்டுண்ட கரம் உடைத்து
புது களம் திறப்போம் புலத்தினிலே.
நாம் அங்கு மரணித்து போகவில்லை
இங்கு தான் மரணித்து போவோம் இனி.
No comments:
Post a Comment