4 Dec 2009

துடைத்து எறிவோம் துணிந்து எழுவோம்


கண்ணீரை கடன் கேட்டு
இருளுக்குள் உனை அழைக்கும்
காப்பாற்றும் எண்ணத்தை
குழி தோண்டி அது புதைக்கும்
நினைவுகளை கிண்டி விட்டு
நிலைகுழைய செய்து வைக்கும்
உறக்கத்தை அது தடுத்து
மன உளைச்சலை
கொடுத்திருக்கும்


விழிகளில் வடிகின்ற
விழி நீர் மடல் திறந்து
விடைகொடுங்கள் வலிகளுக்கு


இதயத்தில் வடிகின்ற
குருதியை புணல் இட்டு
நெருப்பிடுங்கள் நினைவுகளுக்கு


சுற்றி வந்து சுயத்தை கேட்டால்
புன் சிரிப்போடு பதில் கொடுங்கள்
சுற்றத்திற்கு


சுட்டெரிக்கும் சூரியனாய்
சுடர் பரப்பும் சுவாலைகளாய்
சுயமாக நின்றிடுங்கள்


எட்டெடுத்து நடை நடந்து
எதிர் வரும் இடர்களுக்கு
சட்டென்று பதில் கொடுப்போம்


சத்தங்கள் எதுவும் இன்றி
சமரசங்கள் உதவி இன்றி
இடர்களை உடைத்தெறிவோம்
மன உளைச்சல் எமக்கிருந்தால்
மன வலிமை குன்றிப்போகும்


மன வலி குன்றி போக
உடல் வலிமை அற்று போகும்


வலி கொண்டு வழி செய்ய
துடைத்து எறிவோம் இன்றே
உடல் வலி(மை ) நாம் பெற
துணிந்து எழுவோம் நன்றே

1 comment:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

//விழிகளில் வடிகின்ற
விழி நீர் மடல் திறந்து
விடைகொடுங்கள் வலிகளுக்கு

எட்டெடுத்து நடை நடந்து... See More
எதிர் வரும் இடர்களுக்கு
சட்டென்று பதில் கொடுப்போம்//

ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இப்படியான உணர்வை கொடு இறைவா......

துணிவு கொண்டு துணிந்து எழுவோம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து

அருமையான வரிகள் வீரமுரசொலியாக
தொடர்ந்து முழங்கட்டும்

வாழ்த்துக்கள்