கண்ணீரை கடன் கேட்டு
இருளுக்குள் உனை அழைக்கும்
காப்பாற்றும் எண்ணத்தை
குழி தோண்டி அது புதைக்கும்
நினைவுகளை கிண்டி விட்டு
நிலைகுழைய செய்து வைக்கும்
உறக்கத்தை அது தடுத்து
மன உளைச்சலை
கொடுத்திருக்கும்
இருளுக்குள் உனை அழைக்கும்
காப்பாற்றும் எண்ணத்தை
குழி தோண்டி அது புதைக்கும்
நினைவுகளை கிண்டி விட்டு
நிலைகுழைய செய்து வைக்கும்
உறக்கத்தை அது தடுத்து
மன உளைச்சலை
கொடுத்திருக்கும்
விழி நீர் மடல் திறந்து
விடைகொடுங்கள் வலிகளுக்கு
இதயத்தில் வடிகின்ற
குருதியை புணல் இட்டு
நெருப்பிடுங்கள் நினைவுகளுக்கு
சுற்றி வந்து சுயத்தை கேட்டால்
புன் சிரிப்போடு பதில் கொடுங்கள்
சுற்றத்திற்கு
சுட்டெரிக்கும் சூரியனாய்
சுடர் பரப்பும் சுவாலைகளாய்
சுயமாக நின்றிடுங்கள்
எட்டெடுத்து நடை நடந்து
எதிர் வரும் இடர்களுக்கு
சட்டென்று பதில் கொடுப்போம்
சத்தங்கள் எதுவும் இன்றி
சமரசங்கள் உதவி இன்றி
இடர்களை உடைத்தெறிவோம்
மன உளைச்சல் எமக்கிருந்தால்
மன வலிமை குன்றிப்போகும்
மன வலி குன்றி போக
உடல் வலிமை அற்று போகும்
விடைகொடுங்கள் வலிகளுக்கு
இதயத்தில் வடிகின்ற
குருதியை புணல் இட்டு
நெருப்பிடுங்கள் நினைவுகளுக்கு
சுற்றி வந்து சுயத்தை கேட்டால்
புன் சிரிப்போடு பதில் கொடுங்கள்
சுற்றத்திற்கு
சுட்டெரிக்கும் சூரியனாய்
சுடர் பரப்பும் சுவாலைகளாய்
சுயமாக நின்றிடுங்கள்
எட்டெடுத்து நடை நடந்து
எதிர் வரும் இடர்களுக்கு
சட்டென்று பதில் கொடுப்போம்
சத்தங்கள் எதுவும் இன்றி
சமரசங்கள் உதவி இன்றி
இடர்களை உடைத்தெறிவோம்
மன உளைச்சல் எமக்கிருந்தால்
மன வலிமை குன்றிப்போகும்
மன வலி குன்றி போக
உடல் வலிமை அற்று போகும்
துடைத்து எறிவோம் இன்றே
உடல் வலி(மை ) நாம் பெற
துணிந்து எழுவோம் நன்றே
உடல் வலி(மை ) நாம் பெற
துணிந்து எழுவோம் நன்றே
1 comment:
//விழிகளில் வடிகின்ற
விழி நீர் மடல் திறந்து
விடைகொடுங்கள் வலிகளுக்கு
எட்டெடுத்து நடை நடந்து... See More
எதிர் வரும் இடர்களுக்கு
சட்டென்று பதில் கொடுப்போம்//
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இப்படியான உணர்வை கொடு இறைவா......
துணிவு கொண்டு துணிந்து எழுவோம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து
அருமையான வரிகள் வீரமுரசொலியாக
தொடர்ந்து முழங்கட்டும்
வாழ்த்துக்கள்
Post a Comment