9 Dec 2009

நீ அறியா உண்மைகள்


நான் உடைந்து விழும் அந்த
ஒரு துளி நிமிடங்களில்
எனக்கான இலைகளாய் நீ இருப்பது
இயற்கையின் நியதி எனில்
விழும் எனை தாங்கும் உந்தன்
இலை என்னும் கைகளில்
எனக்கான விடுதலை
புதைந்து விடுவது
நீ அறியாதது உண்மையே

தினம் இங்கே சில்லிட்டு பெய்யும் இந்த
சில்லென்னும் குளிர் காற்றில்
சிறகடித்து பறந்து வரும்
சில சிற்றின்ப கனவுகளில்
என் உறக்கத்தை மகிழ்விப்பது
உன் புன்னகை என்பதும்
உன் புன் நகைகளில் என்
கண் இமைகள் காய்ந்து போவது
நீ அறியாதது உண்மையே

கரும் புகை வாங்கும் நீண்ட இந்த
தெருவோர மர நிழல்களில்
ஒரு தரம் இரு(க்)கை போடும்
என் தனிமைகளில்
என் ஒரு கை பாடும்
தேன் இசை மெட்டுக்களாய்
உன் மெல்லிசை குரல் ஓசை
இதம் தந்து போவதும்
என் இதயம் வந்து போவதும்
நீ அறியாதது உண்மையே

அறிவு க்கும்
அறி யாமைக்கும்
எடை போடும் இந்த
இய லாமைக்கும்
நிலைக்காத நினைவுகளாக
நினைவில் அழிந்து போய் விட
நீ அறியா உ்ணமைகளை நான்
அறிந்ததாய் காட்டி கொள்கிறேன்
இன்று.

No comments: