16 Dec 2009

எனது தனிமை



எங்கோ ஒரு மூலையில்
என் கேள்விகளுக்கான பதில்
இன்னும் புதைந்து கிடப்பதாகவே
நான் எண்ணிக் கொள்கிறேன்.

கேள்விகள் பல கேட்டு
வாழ்ந்த காலங்கள் போய்
இன்று
விடைகளைத் தேடி நாடிச் செல்கிற
விசித்திர மனது இது

மேலிருந்து சிந்தும் அந்த
கண்ணீர் மழைத்துளி சத்தத்துள்
அமைதியான என் உலகம்
அதை இழந்து தவிப்பதை உணர்ந்து கொள்கிறேன்

மின்குமிழ் வெளிச்சத்தில் கூட
கனவுகள் வரும் என்று
அந்த ஒரு நொடி
அடையாளம் காட்டி சென்றது எனக்கு

திக்கற்று ! சுழன்று திரிந்து
சின்னதாய்
ஒரு சிரிப்புலகைத் தேடிப் பிடித்து
அதன் துணையாய்
கூடவே
கண்ணீரையும் கூட்டி வரும்
என் சிந்தனை ஓட்டம் இனிமேலும் வேண்டாம்

யாரும் இல்லா ஒரு விசித்திர உலகத்துள்
நானும் என் கேள்விகளும் மட்டும்
நடை போட்டோம் விடைகளை தேடி..

எங்கோ ஒரு மூலையில் அது
இன்னும் புதைந்து கிடப்பதாகவே
எண்ணிக் கொள்கிறேன்.

No comments: