26 Sept 2010

உன்னை உருக்கி !!!


உயிரை திரியாக்கி
உறவை ஊக்கியாக்கி
எமக்காய் உருகிப் போனாய்
உரிமைக்காய்
கருகிப் போனாய்
விரலுடுக்கில் வீக்கங்களாய்
இன்னும் வலிக்கிறது
உன்னை சுட்ட
தீயின் வலி
சூழந்து நிற்கும் இருளுக்குள்ளும்
வெளிச்சங்களாய் தெரிகிறாய்
விடுதலைக்கு வழி விட்டு
தொடர்ந்து பார்க்கிறேன்
என்னை தீ
தீண்டும் வரை
நம்பிக்கையோடு இரு
அண்ணா   ...!!!

No comments: