1 Sept 2010

மானுட நீதி



துள்ளித்திரியும் தாவித்திரியும்
தள்ளி வைத்தே தவளை என்போம்
அழுக்கென்போம் அரவணைக் 
மறந்திருப்போம்
தோழில் விழுந்தவனை சுமந்து கொண்டது
சுத்தம் பார்க்கல அதன் சுகம் பார்க்கல
அக்கரைக்கு போனதும் அக்கறையின்றி
அடுத்தவழி தேடிக் கொண்டாலும்
தப்பாமல் சுமந்து கொண்டது
சுகமாக ஏற்றுக் கொண்டது
நானும் நீயும் ஒர் இனம் என்று.
மனிதனும் மறந்து போன
மானுட நீதியை
உங்களிடம் கண்டு கொள்கிறோம்

No comments: