கல்லரை வீரர்கள் கண்திறப்பார்கள் அவர்
கனவுகள் கலைவதில்லை
உயிரோடு கலந்திட்ட உறவுகள் ஒருபோதும்
எமைவிட்டுப் போவதில்லை
போர்க்களம் புகுந்திடும் போதிலும்
தோழன் புன்னகை வீசியே போனான் - என்
தோழ்களைத் தழுவியே போகிறேன் என்றவன்
கைகளை அசைத்துமே சென்றான்
நித்தமும் பூத்திடும் பூக்களில் இவன்
பூமுகம் பார்க்கிறோன்
வீசிடும் தென்றலில் தான் தினம்
இவன் வாசனே தேடினோன்
கண்களில் நீர் வடிந்திட அவன்
கனவினை சுமந்திங்கு நிற்கின்றோன்.
No comments:
Post a Comment