13 Dec 2011

சாட்சி














எங்கள் கருவறைகள் சிதைக்கப்பட்டு
நாங்கள் வன்புணரப்பட்டோம் - இருந்தும்
அழுவதை தவிர்த்துக் கொண்டோம்

எங்கள் கண்கள் பிடுங்கப்பட்டு
நாங்கள் குறுடர்களாக்கப்பட்டோம் - இருந்தும்
வலிகளை தாங்கிக் கொண்டோம்

எங்கள் குரல்வளை நெரிக்கப்பட்டு
நாங்கள் அடிமைகள் ஆக்கப்பட்டோம் - இருந்தும்
கூச்சலிட மறுத்துக் கொண்டோம்

நாங்கள் மரணத்துள் வதைக்கப்பட்டும்
இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
உங்கள் விடுதலையின் தேவைகளை
உணர்த்தும் உலகின் கண்
'' சாட்சிகளாய் ''

2 comments:

Yaathoramani.blogspot.com said...

மனத்தில் பெரும் வலியை ஏற்படுத்திப் போகும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மனதின் கிறுக்கல்கள் said...

நன்றிகள்