20 Apr 2012

பிரளயம்.....


இயற்கையில் நிகழும் பிரளயம் ஒவ்வொன்றும்
மறு உதயத்தின் அத்தியாயம்
அதுவே உனக்கும் எனக்கும்
அவிழ்க்க முடியா முடிச்சுகளாய்
உறவின் அடையாளமாய்

அடங்க மறுக்கும் உன் திமிரும் - என்னை
உன்னில் பற்றிக் கொண்ட பிடிவாதமும்
உனக்கான எனது அடையாளம்
மழையெனக் கொட்டும் உன் அன்பில்
முழுவதுமாய் நனைந்தபடி
தாமரை இலைகளாய்
நடிக்க மட்டுமே முடிக்கிறது

நீண்டு செல்லும் என் ஆசைகளும்
நீ கொடுக்க முறுத்த முத்தங்களும்
கசக்கப்பட்ட கடதாசிகளாய்
என்னைச் சூழ்ந்து 

தலையணை இன்றி
சாய்ந்து பழகிய என் சிரம் மட்டும்
உன் மடியணை கேட்டு அழுவதெப்படி !!!

தாய் மடி தொலைந்த நாள் முதலாய்
என தன்னை மண் கொடுத்த சுகம்
தீயில் வெந்தழிந்த நாள் தொட்டு
தூக்கம் மறுத்த விழிகளும் - இன்று உன்னால்
சற்றேனும் ஓய்வு கொள்வது தான்
உண்மையடி

நான் விட்ட தவறுகளை
சரி செய்யும் உன் போதனைகள்
என் இமைகளை எனக்கே
நினைவில் கொள்ளச் சொல்கிறது

பிரளயம்
இது நடந்து கொண்டே இருக்கட்டும்
நாமும்
மீண்டும் மீண்டுமாய்
அவதரித்துக் கொண்டேயிருப்போம் 


No comments: