உன் மௌனங்கள்..
இரவின் மௌனத்திற்குள்
இருளின் அடர்த்திக்குள்
உறங்கிக் கிடக்கிறது
நிலவின் பெருமை...
அது
உன்னைப் போல்
உந்தன் உணர்வைப் போல்...
தனக்கான வார்த்தைகளை
பேச மறுக்கிறது,
நிலவைப் பார்த்து
நினைவை மீட்பவன் போல்
உன்னைப் பார்த்து
உந்தன் மௌனங்களை
தேடிப் படிக்கிறேன்..
1 comment:
நிலவைப் பார்த்து
நினைவை மீட்பவன் போல்
உன்னைப் பார்த்து
உந்தன் மௌனங்களை
தேடிப் படிக்கிறேன்..//
அருமை அருமை
வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment