18 Dec 2012

கரையைக் கடந்த புயல்கள் .....


வறுமைத் தீயின் வேதனை தாங்கா
எங்கள் குடில்கள் தீப் பற்றிக் கொண்டன
நாளிதல்கள் வித விதமாய் வர்ணங்களில்        
தலைப்புகள் தீ்ட்டின
நான்கு திக்கும் சுழன்றவர் விழிகள்
நாவினை புரட்டிப் போட்டன
வீதிக்கு வீதி எங்கள் தலைவிதி
விற்கப்பட - நாங்கள்
விலைப் பண்டங்களானோம்

அன்றைய பெண்கள்
நேற்றைய புயல்கள் - புதுப்
பூபாலம் பாடும் புலிகளென
எல்லாம் மலிவு விலைக்கு
ஏலத்தில் வந்தன ..
கற்பும் மானமும் மீண்டும் - எம்
முற்றங்களில் கோலங்களாக
எங்கள் வாசல்கள் மூடப்பட்டன.
நாங்கள்
மீண்டும் சிறைப்பட்டோம் ...

No comments: