25 Dec 2012

மீட்பரின் வரவுக்காய் ...



அன்று ஒரு மனிதனாக பிறந்தீர்
வாழும் நெறி தனை காட்டி சென்றீர்
பயணிக்க முடியா ஒரு பாதையில்
மனித குலத்தை அழைத்தீர் - அங்கே

ஒர் வழிகாட்டியாய் நீர் முன் செல்ல
பின் வந்தோரால் வெறும் தெய்வமாய்
ஆக்கப்பட்டு - இன்றிங்கே
உணர்வற்ற கட்டிட சிதைகளுக்குள்
சிறைப்பட்டுள்ளீர் பாரும்.

கண்முன் வாழ்ந்து சென்ற உம்மை
பின் பற்றி வாழ முடியா
பண் பற்ற ஜீவன்களாய் நாம் இங்கே
இருந்தும் உம் பிறப்பால்
நான்கு நாள் விடுமுறைக்காக
உலகின் சட்டத்திற்கு நன்றி கூறுகிறேன்
யேசுவே..

நத்தார் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

No comments: