Showing posts with label படித்ததில் புரிந்தது. Show all posts
Showing posts with label படித்ததில் புரிந்தது. Show all posts

25 Jan 2010

ஆயிரத்தில் ஒருவனும் நாமும்


சினிமா விமர்சனம்

என்பதற்குள் நான் அதிகம் நுழைந்து கொள்வதில்லை. நான், அதற்கும் எனக்கும் இடையில் எப்போதும் ஒரு இடைவெளியை வைத்திருக்கவே விரும்புகிறேன் . காரணம் அது பலருடைய பணத்தினால் முதலீடு செய்யப்பட்டு பலருடைய வியர்வையை கூலியாக கொட்டி பல இரவு பகல்கள் கடிண உழைப்பினால் உருவான ஒரு கலை அடையாளம். எங்கே அதை பற்றி நான் எழுதுவது ஒருவனுடைய உழைப்பை குறை கூறுவதாகி விடுமோ என்ற எண்ணத்தால் தான் நான் அதை ஒதுக்குவதே.

ஆனால் இன்று இங்கே ஒரு கட்டுரையை படித்த பின்னர் நிச்சயம் நான் இதை எழுதியே ஆகவேண்டும் என்று தோன்றியது. அது நிச்சயம் அந்த படைப்பை குறை கூறுவதாக இல்லாமல் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் என்ற ஒரு அர்த்ததுள் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன் . அது தற்போது இந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படைப்பின் பின்னால் ஈழத்தமிழர்களது போராட்டமும் அதை சார்ந்தே இந்த திரைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதான ஒரு கருத்தோட்டம் இங்கே பலர் மத்தியில் எழுவதனால் நான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முற்படுகிறேன்.

- ஆயிரத்தில் ஒருவன் -


நிச்சயம் தமிழ் சினிமாவினை ஒரு அடுத்த நிலைக்குள் துாக்கி சென்ற ஒரு அற்புதமான கலை அடையாளம் என்பதில் எனக்கு எவ்விதத்திலும் எதிர்கருத்து கிடையாது. செல்வராகவனின் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து வருகிறேன் .
( துள்ளுவதோ இளமை பார்க்க முடிந்தது என்னவோ புலத்தில் தான் என்பது வேறு கதை ) நிச்சயம் அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் தான். அதுவும் இந்த ஆயிரத்தில் ஒருவனின் பின்னால் முற்றிலும் அவரே ஒரு ஆயிரத்தில் ஒருவனாகி இருப்பது உண்மையே. இருந்தும் திரும்பத் திரும்ப செல்வராகவன் பற்றியோ அவரது படைப்புகளை பற்றியோ விமர்சனம் செய்வதை தவிர்த்து நேராகவே விடையத்துக்கு வருகிறேன்.

அந்த 1000 இல் ஒருவன் நிச்சயம் செல்வராகவனுக்குள் இருந்த ஒரு மேலைத்தேய சினிமா படைப்புகளுக்கும் ரசிகர்களான நமக்கும் இடையேயான ஒரு ஈர்ப்பின் பால் அதையும் தாண்டி இளம் ரசிகர்கள் செய்யும் கேலிகளுக்கும் நகைப்புகளுக்கும் ஒரு பதில்அடியாகவே அவரால் உறுவாக்கப்ட்டிருக்கலாம் என்பது எனது ஊகம். ஏனெனில் நாம் அனைவருமே எப்போதும் எந்த ஒரு பிரமாண்ட சினிமா வெளிவரும் போது அதை மேற்குலக சினிமா படைப்புகளுடன் ஒப்பிட்டு நகைப்பதையும் அதையும் தாண்டி அந்த படைப்பை நையாண்டி செய்வதையும் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளோம். அப்படியான ஒரு வட்டத்திற்குள் நிற்கும் எம்மை தமிழ் படைப்பாளிகளாலும் மேலைத்தேய சினிமாக்கு நிகரான பிரமாண்ட படங்களை உறுவாக்க முடியும் எமக்குள்ளும் அப்படிப்பட்ட கலைஞர்கள் உள்ளார்கள் என்று எடுத்துக்காட்டவும் அதை ஒரு பரீட்சை களமாக தனக்குள் எடுத்துக் கொண்டு பெரிய ஒரு முதலீட்டுடன் ஒரு புதிய களத்தை திறந்து வைத்துள்ளார் என்பது மறைக்கப்பட முடியாத உண்மை.
( இதற்கு பின்னாலும் இப்படியான ஒரு முயற்சி இருக்குமா என்பது இதன் வருமானத்தை பொருத்தே தங்கியுள்ளது என்பது வேறு கதை ) .
இந்த பரீட்சையில் நிச்சயம் இவரை சித்தியடைய வைப்பது நம் ஒவ்வொருவரது கரங்களிலும் உள்ளது. அதற்கு அவர் தான் ஒரு தமிழ் இயக்குனராக இருந்து தமிழர்களது வரலாற்று சம்பவங்களில் தமிழரது பொற்காலம் என சொல்லப்படும் சோழர் காலத்து வீழ்ச்சி யின் பின்னரான ஒரு கதை கருவை எடுத்து கொண்டார் என்பது தான் இங்கு தமிழர்களான எம்மால் பாராட்டப்பட வேண்டிய விடையம். சோழரது வீழ்ச்சியும் பாண்டியர் வருகையும் என்ற ஒரு வரலாற்று திருப்பத்தில் நின்று கடல் கடந்த சோழர்களது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அங்கு ஒரு கற்பனைக் கதை களத்தை திறந்து விட்டுள்ளார்.
( இப்படியான ஒரு கற்பனை கதை அம்சம் தான் “ mummy returns ” மற்றும் “ timeline ” என்ற திரைக்களமும்) .
ஆனால் இவற்றை ஒட்டியே இவர் இதை எடு்த்துள்ளார் என்றால் இல்லை என்பதே எனது பதிலும். மேற்குலக சினிமா அவர்களது வரலாற்று கதையை பின்னனியாக கொள்ள ஒரு தமிழ் இயக்குனராக இவர் தமிழரது வரலாற்று கதை களத்தை எடுத்துள்ளார் என்பது தான் ஒற்றுமை.

அதையும் தாண்டி நாம் இதை ஈழத்தமிழர்களை தான் செல்வராகவன் தனது படைப்பில் அடையாளப்படுத்தி உள்ளார் என்பதும் ஈழத்து வலிகளை தான் அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்பதும் உண்மை என்று நமக்குள் நாமே ஒரு விமர்சனம் செய்வது நம்மை நாமே சிறுமைப்படுத்தி கொள்வதற்கு சமன்.

திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே அது மிகத் தெளிவாக சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையேயான ஒரு காலகட்டத்தில் நடந்த சம்பவம் என்பதும் அங்கு அந்த கதைக்களம் அதை பின்னனியாக கொண்டு கற்பனைக்குள் பயனிப்பதாகவும் தெளிவாகவே சுட்டிக்காட்டப்படும் போது நாம் நம்மை இவ்வளவு துாரம் தாழ்த்தி கொள்கிறோம் என்பது தான் இங்கு வேடிக்கையாக உள்ளது.

பலரது விமர்சனங்களுக்கும் காரணமான அந்த இடைவேளையை கடந்து நகரும் கதைக்களம் ஏதோ வன்னி வாழ் மக்களையும் அவர்களது இறுதி யுத்தகளமுமே என்று நீ்ங்களே உங்களுக்குள் கற்பனை செய்துகொண்டு ஏதோ மாய உலகத்துள் கட்டுண்டு அந்த படத்தை பார்க்கும் போது அது உங்கள் மனத்திரையில் அப்படியான ஒரு எண்ணப்பதிவை விதைப்பதை உங்களால் தவிர்க்கமுடியாததே. சரி நீங்கள் சொல்வதாகவே அது அப்படியாக இருக்குமானால் அங்கு பார்த்தீபன் கதாப்பாத்திரமும் அவரை சூழ்ந்து நடக்கும் காட்சிகளும்
( பற்றாக்குறைக்கு ரீமாசென் சோனியா என்ற முத்திரை வேறு. என்ன கொடுமை இது )
யாரை குறிப்பதாக நீங்கள் எடுத்துக் கொள்ளுகிறீர்கள் ???? சொல்லுங்கள் ??
( இல்லை அதை விதிவிலக்காக விட்டு விட்டீர்களா ?)
அந்த இறுதிக் களம் கடற்கரை பகுதியில் நடப்பதாகவும் அங்கு காப்பாற்றப்பட்ட சோழ இளவரசன் தளபதியின் துணையுடன் காட்டுக்குள் போவதும் மீண்டும் சோழர்கள் வருவார்கள் என்பதும் மக்கள் கடற்கரையில் கப்பலை எதிர்பார்த்து காத்திருப்பது என்பதும் என்றும் அந்த முள்ளிவாய்க்கால் சம்பவத்துடன் இதை ஒப்பிடுகிறீர்களா...????????????????????
( உங்களை எப்படிச் சொல்லித் திட்டுவது என்று எண்ணுகிறேன்) .

இப்படியான மிகவும் கீழ்த்தரமான சிந்தனை எப்படி உங்கள் மனங்களில் எழுகின்றன என்பது தான் எனது கேள்வி.

ஈழப்போரில் அந்த முள்ளிவாய்க்கால் களத்தில் இருந்த சாட்சிகள் இன்னும் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் போது அவர்கள் பட்ட துன்பங்களை நீங்கள் இப்படி ஒரு 3 மணிநேர சினிமாவுக்குள் ஒப்பிடுவது எப்படிப்பட்டது என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். தயவு செய்து இனிமேலும் ஒரு சினிமாவை சினிமா என்ற ஒரு வட்டத்தை தாண்டி உங்கள் வாழ்க்கையுடன் அதுவும் ஈழத்தமிழர்களது வாழ்க்கையுடன் ஒப்பிடாதீர்கள்.
ஏற்கனவே - தம்பி - கன்னத்தில் முத்தமிட்டால் - என்று நீங்கள் பட்ட அனுபவங்களை தாண்டியும் இன்று ஒரு ஆயிரத்தில் ஒருவனும் கேக்கிறதா உங்களுக்கு ??

ஈழத்து அனுபவங்களை நிச்சயம் ஈழத்துக்குள் இருக்கும் ஒரு படைப்பாளியால் அன்றி அதை வேறு யாராலும் அவ்வளவு இலகுவில் படைப்புக்குள் கொண்டு வந்து விடமுடியாது என்பது தான் உண்மையே. அப்படி உங்களுக்கு ஒரு ஆசை , வேட்கை இருக்குமானால் அதை அப்படியே உங்கள் முயற்சியால் ( விமர்சனம் செய்பவர்கள் தயவு செய்து முயற்சிக்காதீர்கள் ) நீங்களே பதிவு செய்ய முற்படுங்கள். அதை விட்டு இந்திய தணிக்கை குழுக்களை தாண்டி , இந்திய அதிகார வர்க்கத்தை தாண்டி , அந்த வர்த்தக மோகத்தை தாண்டி , அந்த சீர்கெட்டு போகும் கலாச்சார வட்டத்துக்குள் நின்று ஒரு கலைஞனால் இந்த ஈழத்தமிழர்களது அவலங்களை அவலங்களாகவோ, காட்சிகளாகவோ, ஒரு கலை இலக்கிய படைப்பாகவோ வெளிக்கொணர முடியாது என்பது தான் இங்கு உண்மை. பதிவு செய்ய வேண்டும் என்ற தாக்கம் அங்கு அதிகமாகவே பல படைப்பாளிகள் மத்தியில் உள்ளது என்பது வேறு, ஆனால் அதற்கான உகந்த சூழல் இல்லை என்பதும் உண்மை தானே.

எனவே தயவுசெய்து இனிமேலும் இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஒப்பீடுகளை தவிர்த்துக் கொண்டு சினிமா என்ற வட்டத்துள் நின்று அதை அதன் வட்டத்துள் விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
உங்கள் விமர்சனங்களால் நொந்து போன
- து.தயாளன்-

31 Dec 2009

ஏது “ புது ” வருடம்


“ புது வருடம் ”
பிறந்து விட்டது
சொன்னது...
நாட்காட்டி !
எட்டி வந்து வெளியே பார்த்தேன்
மாற்றம் ஏதும் நிகழ்ந்ததாய்
“ இயற்கை ” ஒன்றும் சொல்ல வில்லை

அதே வானம் கரிய மேகங்கள் சூழ்ந்து
நீல வண்ண கடல் மௌனமே பதிலாக
குளிர்ந்த தென்றலாய் காற்று கூட மாற்றமின்றி

வாடிய வதனத்துடன்
நாட்குறிப்பில் எழுதுகிறேன்
“ இயற்கையும் ” மாற வில்லை - இங்கே
எந்த
“ மனிதனும் ” மாற வில்லை

அடக்கு முறையால் அடக்கப்பட்ட
“ சிறு பான்மை ” இனங்கள் எல்லாம்
ஏது
“ புதுவருடம் ” என்று
எதிர் பார்த்து நிற்க

என் தேசத்து சொந்தங்களே

நீங்கள் எதிர் பார்க்கும்
சமாதான பேய்கள்
எட்டி நின்று உதைக்கவே போகின்றது
உங்களை

எழுந்து நீங்கள் அழும் முன்னே
ஒழிந்து நின்று “ போர்முரசு ” செய்யும்
அதனால்
தயாராகவே இருங்கள்

மாற்றங்கள் இன்றி தான்
விடியலும் விடிந்தது - அந்த
சூரியனும் உதித்தது
நாமும் அப்படியே
இருப்போம்

“ தமிழீழம் ” எனும் தேசம் தோன்றி
எம் வீரர் கனவு நனவாகும் வேளை
“ புதுவருடம் ” பிறந்தமதாய்
கல்வெட்டில் நாம் பதிப்போம்
அது வரை எமக்கு
ஏது
“ புது ” வருடம்.

1 Nov 2009

உணர்வாளர் சிமானுக்கு ஒரு திறந்த மடல்..

வணக்கம் உணர்வாளர் சீமான் அவர்களே..

உங்கள் உணர்வு பொங்கும் பேச்சுக்களை கேட்டு ஆகா !! இப்படி ஒரு தமிழன் இந்திய மண்ணில் இருந்து செயற்பட்டுப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதே மீண்டும் இனி தமிழன் அங்கு விழித்து கொள்வான் அதற்கு உங்கள் போன்ற சிலர் செயற்பட்டே அகவேண்டும் என்று எண்ணிக் கொண்ட பல ஆயிரம் ஈழதமிழரில் நானும் ஒருவன்.(ஈழத்தமிழன் என்ற அடையாளத்தை  இங்கு பயன்படுத்துவதை இட்டு மனவருத்தம் தான்,என்ன செய்யமுடியும் இன்று தமிழன் என்று ஒருவனையும் காணவில்லையே வெறும் எழுத்தில் மட்டும் தெரிகிறது உங்கள் " நாம் தமிழர் " )

ஆனால் அந்த கொடிய இறுதி யுத்தத்தின் பின்னர் நீங்கள் போகும் பாதை மிகவும் புதிராக தெரிகிறது.எவ்வளவு துாரம் உங்கள் செயற்பாட்டை ஆதரித்தோமோ அதே உணர்வோடு உங்களை துாக்கி போடவும் தயாராகி விட்டோம்., இருந்தும் உங்கள் தமிழ் பற்றும் எம் ஈழம் மீதும் உங்களுக்கு இருக்கும் பற்றுக்கும் என்றும் மரியாதை உண்டு, ஆனால் அது கூட எதிர்கால உங்கள்  செயற்பாட்டினை அடுத்து துாக்கி எறியபட்டாளும்  அது ஒன்றும் அதிசயம் அல்ல
முன்பொரு முறை இன்றைய உங்கள் உணர்வுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத " கொலைஞரும் " ( இது தான் கொடுத்தாகி விட்டதே) , ஜெய் அம்மையாரும் பேசாத பேச்சுக்களையா நீங்கள் இன்று பேசிவிட்டீர்கள்.இன்று அதே வாய்கள் பேசுவதை கேட்க முடிகிறதா..???


அந்த இறுதி யுத்த அழிவின் விழிம்பில் நின்று என் சொந்தங்கள் கதறியபோதும் யாருமே அந்த குரல்களக்காக ஒன்று சேர்ந்தார்களா இல்லையே..? அந்த நொடியில் கூட அனைவரும் (வை.கோ, திருமா,ராமதாஸ்,பாண்டியன்...இன்னும் பல பல வேண்டாம் பட்டியல் மிக பெரிது) தங்கள் சுயநல அரசியல் மீது லாபம் தேடும் செயற்பாடகளில் தான் இருந்தார்களே அன்றி யாரும் ஒன்று சேரவில்லையே..பிறகு என்ன தமிழன் நீங்கள் எல்லாம்.

சரி விடயத்திற்கு வருகிறேன்..

1.இன்று உங்கள் நாம் தமிழர் இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக உறுமாற்றம் பெறும் அடையாளங்களை கண்டு கொண்டேன். குறிப்பாக சாதி வெறி பிடித்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை போட்டு உங்கள் அடையாளத்தின் மீது நீங்களே சேற்றை அள்ளி கொட்டி உள்ளீர்கள்.இதை விட

2.நாம் தமிழர் இணைய வட்டம் மூலம் அன்மையில் வெளியாகி கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் அதுவும் உங்கள் இயக்கத்தின்( இன்றுவரை அப்படி தானே சொல்கிறீர்கள் )  இலட்சினையாக நீங்கள் தெரிவு செய்திருக்கும் அந்த " இலட்சனை" பற்றியது.பல்லாயிரம் வீரர்கள் இரத்தம் சிந்தி நம் பல உறவகளின் குறுதியின் மீது உறுவாக்கப்பட்ட அந்த ஈழத்தின் தேசிய சின்னத்தின் மீது உங்கள் அடையாளம் கண்டு துடித்த ஒரு உணர்வுள்ள தமிழன் நான்.

3.நாம் தமிழர் இயக்கமாக தோற்றம்பெற்ற உங்கள் இயக்கம் படிப்படியாக ஒரு அரசியல் கட்சிக்கு உரிய வடிவங்களை எடுத்த வருவதும் அதற்கு ஏற்ப நீங்கள் செயற்பட்டு வருவதும்.

இப்படியாக இன்று உங்கள் செயற்பாடுகள் ஒரு தமிழனாக எம்மத்தியில் உங்களுக்கு இருந்த ஒரு அடையாளத்தை அழித்த வருகிறது. ஈழதமிழர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யவேண்டும் என்று இருந்தால் முதலில் உங்கள் சீமான் என்ற அடையாளத்தை கொண்டு செயற்படுங்கள்,தேசிய தலைமையின் அடையாளத்தை கூட கொண்டு திரிந்து உங்கள் அரசியலிற்கு இலாபம் தேடாதீர்கள்.தேசிய தலைமையை சந்தித்த காலகட்டத்தில் நீங்கள் இந்த புகைப்படங்களை வெளியிட்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாமே அதை விட்டு இன்று அந்த தலைமை மௌனத்தை கடைப்பிடிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை சாட்டாக வைத்துக்கொண்டு ஏன் இந்த ஏமாற்று தந்திரம்.

ஒன்றை மட்டும் எங்களால் புரிந்து கொள்ள முடியும்.,அதாவது நீங்கள் ஊறுவாக்க போகின்ற இந்த நாம் தமிழர் இயக்கம் ஏற்கனவே சாதிய அடையாளங்களை கொண்டு பிரிந்து நிற்கும் தமிழர்களை ஒருபோதும் ஒன்று சேர்க்க போவதில்லை.இது வெறும் உணர்வுள்ள உங்கள் பேச்சுக்கு நீங்களே தேடிக்கொண்ட ஒரு ரசிகர் வட்டமே ஒழிய உங்கள் அரசியல் முத்திரைக்கு கிடைத்த அங்கீகதரமாக இருக்கப்போவதில்லை.அப்படியே உங்களால் உருவாக்கப்பட்டாலும் உங்கள் இந்த அரசியல் முகம் நாளை உங்கள் ஆட்சிக்கும்,உங்கள் சுயநல தேவைகளுக்கும், முண்டுகொடுக்க நீங்களும் ஏதாவது ஒரு கட்சியின் சாக்கடை அரசியலுக்கு கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும்.

எனவே மீண்டும் மீண்டும் இந்த ஈழத்தமிழரது நெஞ்சங்களில் உங்கள் கேடுகெட்ட சுயநல அரசியல் ஈட்டிமுனைகளை கொண்டு குத்தி காயம் செய்யாதீர்கள் என்று மண்றாடி கேட்டுகொள்ளுகிறேன்.

இப்படிக்கு..
நாடற்று நடுத்தெருவில் நிற்கும்
ஒரு ஈழதமிழன்



புலம்பெயர் மக்களுக்கு இந்த பதிவின் மூலம் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.நான் ஒன்றும் பெரிய அரசியல் விற்பனர் அல்ல சாதாரண ஒரு 30 நிறம்பிய இளைஞனே.இருந்தும் எனது கடந்து வந்த பாதைகளில் கண்டுகொண்ட சில அரசியல் ஏமாற்றங்களும் நடந்து முடிந்து விட்ட அந்த கொடிய இறுதி நிமிடங்களின் பின்னர் மீண்டு வந்த ஒரு தமிழச்சியின் இரத்தக்கண்ணீரின் பதிவாக இதை கொடுக்கிறேன்.

இறுதிவரை தன்மக்களுக்காக போராடிய ஒரு வீரனை தலைவனாக ஏற்றுகொண்ட நாங்கள்,அவ்வாறே அந்த தலைவனின் வழி நின்று போராடி இரத்தம் சிந்தி பல உயிர்களை பலியிட்டு நமக்காக உறவாக்கிய அந்த தேசிய சின்னங்களின் மீது நாம் கொண்ட மதிப்பும் மரியாதையையும் இன்று சில உணர்வாளர்களாக அடையாளம் காட்டுவோர் தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.அதில் சீமானும் ஒருவரே என்பது எனது கருத்து.எவரும் எமக்கான விடுதலையை தரப்போவதில்லை.நாமக போராடி பெற்றுக்கொண்டால் ஒழிய அதற்கு வழி கிடைக்கபோவதில்லை.

எனவே இந்த அரசியல் முகமூடி அணிந்த உணர்வாளர்கள் மீதான எமது மோகத்தை தவிர்த்து கொஞ்சம் எமது கரங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைப்போம்.அவர்கள் எமக்கான குரலாக ஒழிப்பதையிட்டு நிறைவு கொள்வதுடன் மட்டும் இருந்து விட்டால் போதும்.எதிர்வரும் நாட்களில் நாம் எமது மாவீரர்களை நினைவுகூறும் நேரங்களில் வழமையாக மேற்கொள்ளும் இந்த உணர்வாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்தவத்தை புறந்தள்ளி அந்த வீரர்களின் தியாகங்களை மதிப்போமாக.

23 Dec 2000

தமிழுக்காக

தமிழுக்கு நிறமுண்டு என்று
தலைப்பு சொன்னது,
வைரமுத்து வடித்தது என்று
வாசல் சொன்னது
படித்திடும் ஆசையோடு
பக்கங்கள் புரட்டினேன்

பழந்தமிழ் இலக்கியம் முதல்
பாமர இல்லம் வரை
கவி முத்து இவர்
வரி வடித்திருந்தார்

சீர் திருத்தம் என்ற பெயரில் - தமிழை
சீரழித்து வரும் சினிமாவில்
சிந்திக்க சில வரிகளும்
சிரிக்க சில வரிகளும்
சிலிர்க்கும் தமிழில் சினிமா பாடல்
எழுதி வரும் இவரை நான் அறிவேன்

இவன்.......
கவிதை தேனை உண்டு
களிப்புற்றும் இருக்கேன்
கடிந்து கண்டித்தும் இருக்கேன்
என்னுள்ளே

ஆனாலும்
இன்றைய இவன் கவி - என்னுள்ளே
இறைத்த நீர் - எரியும் நெருப்பில்
வாரி தெளித்த எண்ணெய் போன்றிருந்தது


ஆரம்பமே தமிழிற்கு
ஆராத்தி இட்டவன்
தமிழ் வீரம் எழுதி
தலைவணங்கா
தமிழ் வீரம் எழுதி - ஓர்
தமிழனாய் தாண்டவம்
ஆடியிருந்தான்

உயிர்கள் அழிந்த போதும்
உலகம் மாறிய போதும்
உயிர் தமிழ் அழியாத
உண்மைய சொன்னவன்

இன்று...

உயிர்த் தமிழை வளர்ப்பவன் - அவனை
இலை மறை காயாவது
இடித்து உறைத்தானா..?
இல்லை
இவன் தவறி விட்டான் - அதனால் தான்
இவன் மீது கோபம் எனக்கு


விமர்சனம் செய்யும் உரிமை
உணக்கில்லை என்கிறது - மனம்
மனதிற்கு கட்டு போட்டு
மனசாட்சி கூண்டை திறந்து விட்டேன்

வள்ளுவன் வாயால்
வாழ்வு பெற்ற தமிழ்
களப்பிரர் காலத்தில்
நசுக்கப்பட்டு நலிவுற்று
அழியும் நிலையிலும்
நாலடியார் ஏலாதி துாண்களால்
தாங்கி பிடிக்கப்பட்ட தமிழ்
பாதைகள் மாற முற்பட்ட போது
சைவத்தை தன் கண்களாக கொண்டு
தனது தனித்துவம் மாறாத தமிழ்
நாயன்மார் , ஆழ்வார்களால்
துாக்கி விடப்படுகிறது
கவிஞர்களும் காப்பியங்களும்
மாறும் போதும்
மாறாத மங்காத் தமிழ்
தன் உயிர் நாடியை இறுகப் பற்றிய படி
தள்ளாடி வந்து
பாரதி என்ற புரட்சி பாவலன் வாயால்
போர்கொடி துாக்கிய தமிழ்
பாரதிதாசன் அறிஞர் அண்ணா வாயால்
பாரதத்தில் படர்ந்த தமிழ்
கலைஞர் கருணாநிதி மொழி வழியால்
காக்கப்படுகிறதாய்

கவிஞன் இவன்

கவி வடித்திருப்பது
கள பூமியில் வாழ்ந்தும்
காயங்கள் காணா
என் உடலின் மீது
காய்ச்சி எடுத்த கம்பி ஒன்றால்
கணப்படுத்தியது போன்று இருந்தது


கலைஞர் என்ற ஒரு காம்பு
தமிழை காதல் செய்ததாய்
கவிஞன் இவன் கவி வடித்திருப்பது
உண்மையே


திராவிடர் இயக்கம் என்ற பெயரில்
திரண் டெழுந்த இயக்கம் - அன்று
திசையற்று போக இருந்த என் தமிழை
திசை காட்டி அழைத்திருந்தனர்
அதில்..
முத்தமிழ் வித்தகனாக
முது பெரும் அறிஞனாக
கலைஞர் இவர்
கருனாநிதி
கம்பீரமாய் கதிரை மேல் அமர்ந்திருந்தார்

என்று எங்கோ படித்ததாய் ஒரு ஞாபகம்

ஆனால் இன்று..... இந்தி என்ற ஆரிய மோகம் போய்
ஆங்கிலம் எனும் நாகரீக பேய்
தமிழை மிதித்திருக்க
கண்கட்டி வாய் பொத்தி
கதிரை என்ற ஒற்றை ஆசையால்
கதியாலாக இருக்க வேண்டியவன்
கத்தியாக அல்லவா மாறிவிட்டான்

இவனால் தான் இன்று - தமிழ்
இறக்காது இருப்பதாய்
இவன் கவி பாடுவது
இங்கு இனி செல்லாது


ஏழு கால் துாரத்தில் இருக்கும்
என் ஈழத்தில் தமிழ் காணும்
எழுச்சியை பாடாத இவன் - தமிழுக்கு
ஏடு தொடக்கிறானாம்...


ஈழம் மலர்ந்தால் மகிழ்ந்திடுவேன்
ஈழத்தில் புலியை ஆதரிக்க மாட்டேன்

என்றவன்.. இன்று

தமிழுக்காக தன் வாழ்வை அழித்ததாக
தமிழகம் எங்கும் பாடி திரிவதும்
தமிழ் காத்த தெய்வமாக - கவி
இவன் பா வடித்திருப்பதும்
எந்த விதத்தில் நியாயம் ஆகும்


தமிழை சொந்தம் பாராட்ட
உனக்கு என்ன உரிமை என்றால்



இன்று...

தனித் தமிழனாக
தமிழ் வாழ
தமிழ் மக்கள் வாழ
தமிழுக்கு தனி கொடி தந்த
தமிழீழ தங்கங்கள்
எங்கள் செல்வங்கள்
தரணியில் விதையாக வீழ்ந்ததை
தமிழன் எவன் அறிந்திரான்
அந்த உரிமையில் நான் உரைப்பேன்
தமிழ் அது இனி எமக்கே சொந்தம்
வீரத்தமிழ் அது இனி எமக்கே சொந்தம்


சங்க காலம் அது மீண்டும் உதித்ததாய்
சரித்திரமே வியந்து நிற்க
சத்தியம் பாட வேண்டியவன்
சாணக்கியம் பேசி
சறுக்கி விட நினைக்கிறான்

தனி ஒருவனாய்
தோழர் பலர் கூடி
தமிழீழ தலைவன்
தம்பி பிராபகரன்
தமிழனாய் போர் கொடி துாக்கியது
தமிழக கவிஞன் இவனுக்கு
தெரியவில்லையா.....???


இல்லை


தெரிந்திருப்பான் இவன் - எம்மை
அறிந்திருப்பான் எம்மை - ஆனால்
பயந்திருப்பான் எம்மை பாடுவதால்
தடா ஒன்றோ இல்லை
படா பலதோ
பாய்ந்திடும் என்று
பயந்திருப்பான்


பயந்தவன் எல்லாம்
புரட்சி கவிஞனாக முடியாது
பயந்தவன் தமிழ் வீரம் பாடும்
தமிழ் கவிஞனாக முடியாது

அன்று

பாரதியும் பாரதி தாசனும்
பயந்திருந்தால்
பாரத்தத்தில் தமிழ் பா
பாடி இருக்க தான் முடியுமா

இன்று

காசி அண்ணனும்
செல்லப்பாவும் பயந்திருந்தால்
பாரதம் எங்கும்
பா தான் படிட முடியுமா...??


அப்படியும் சிலர் வாழ
இப்படியும் சிலர் வாழ்கிறார்


“தமிழுக்காக”